கொரோனா தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியையும் கண்டுப்பிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
எபிவேக்கொரோனா (EpiVacCorona) என்ற அந்த தடுப்பூசியை, ‘வெக்டார்’ வைரசியல் மற்றும் நுண்ணுயிரியியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளன.
கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களுக்கு 14 முதல் 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை குறித்த தடுப்பூசியை உட்செலுத்தியதாகவும் இதன்போது எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
மேலும் குறித்த நபர்கள் கொரோனா தொற்றின்றி நலமாக இருப்பதாக ரஷ்ய குறிப்பிட்டுள்ளது.
உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை, ரஷ்யா அறிமுகப்படுத்தி இருந்த நிலையிலேயே தற்போது இரண்டாவது தடுப்பூசியும் உருவாக்கப்பட்டுள்ளது.