சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

plastics
plastics

கேரள மாநில உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வரும்போது பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என கேரள மாநில அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இனி எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களும் எடுத்து செல்ல வேண்டாம் எனவும், மும்பையில் பக்தர்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளைக் களைந்து நதியில் விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திட அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளார்.