பிரித்தானியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பாடசாலைகள் பல மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களுடன் முதற் கட்டமாக 40 சதவீத பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளதுடன், மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப சில பெற்றோர்கள் அச்சமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்க வழிகாட்டுதல்களின் படி ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டால், அந்த வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.