எல்லை பகுதியில் பதுங்கு குழிகளை அமைத்தது இந்தியா

johihgigg 2
johihgigg 2

பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி ஜம்மு – காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ள நிலையில் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பூஞ்ச் மாவட்டத்தில் பதுங்கு குழிகள் அமைக்கபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக குறித்த பகுதியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில் ;

பாகிஸ்தானின் தொடர் அத்து மீறல்கள் காரணமாக தினமும் தாம் பாதிக்கப்படுவதாகவும் பதுங்கு குழிகள் தமக்கு பாதுகாப்பை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .