பாகிஸ்தான் புகையிரத தீ விபத்து- 70 பயணிகள் உயிரிழப்பு

pakistan 2
pakistan 2

பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி இடையே புகையிரதம் சென்றுகொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது.

இது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

‘பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரகிம் யார் கான் பகுதிக்கு அருகே லியாகட்பூர் நகரில் கராச்சி – ராவல்பிண்டி புகையிரதத்தில் இன்று வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. புகையிரதத்தின் உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ பரவியிருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தாலும், தீயில் இருந்து தம்மைப் பாதுகாக்க புகையிரதத்திலிருந்து குதித்ததாலும் சுமார் 70 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.