அமெரிக்காவில் ஹாலோவீன் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி

usa
usa

அமெரிக்காவில் இவ்வருடம் நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற சூட்டில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ம் கொண்டாடப்பட்டு வருகின்ற ஹாலோவீன் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்றைய தினம் விடுமுறையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், பூசணிக்காய்களை பயன்படுத்தி அதில், ஓவியம் வரைவது, பல்வேறு வடிவங்களை உருவாக்குவது போன்றவை மேற்கொள்ளப்படும். கப் கேக்கள், கேண்டிகள், அப்பிள்கள் போன்றவையும் பயன்படுத்தப்படும். மேலும், பேய் விரட்டுவதற்காக அதனை போன்று முகமூடிகளை அணிந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில், அமெரிக்காவில் கலிபோர்னியாவின் ஒரிண்டா நகரில் உள்ள ஒரு வீட்டில் ஹாலோவீன் நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.