கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

keeladi
keeladi

தமிழகத்தின் கீழடியில் 12 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு என்று பெயரை மாற்றி அண்ணா சாதித்தார். கீழடி அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றி உள்ளது.

சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் 12.21 கோடி ரூபாயில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.