உத்தர பிரதேசத்தில் உயிரிழந்த இளம் பெண் குடும்பத்தினருக்கு பொலிஸ் பாதுகாப்பு!

untitled 22 png
untitled 22 png

உத்தர பிரதேசத்தில், கூட்டு பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த இளம் பெண் குடும்பத்தினருக்கு, 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம்- ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் இளம் பெண் (19 வயது), கூட்டு பாலியல் பலாத்காரத்தால் படுகொலை செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்த இளம்பெண் குடும்பத்திற்கு 60பொலிஸார், 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் டி.ஐ.ஜி.சலப் மாத்துார் தெரிவித்துள்ளதாவது, “உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் இரு பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த பணிகளை பார்வையிட, லக்னோவில் இருந்து உயர் அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளார். தீயணைப்பு படையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் வீட்டில், எட்டு கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டு, 24மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. தேவைப்பட்டால், அங்கு ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.

மேலும் அங்கு வரும் பார்வையாளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.