இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசியல் தெளிவற்றவர்- பராக் ஒபாமா!

1605187918
1605187918

இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் தெளிவற்றவராக திகழ்வதாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள ‘வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்’ (A Promised Land) என்ற புத்தகத்திலேயே இதனை பதிவிட்டுள்ளார்.

குறித்த புத்தகத்தில் ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர் என்றும், ஆசிரியரைக் கவர பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவரைப் போல் ராகுல் காந்தி ஒரு விடயத்தை முழுமையாக அறிந்து கொள்வதில், ஆர்வம் இல்லாதவராக திகழ்கிறார் என்று ஒபாமா எழுதியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் பிரபல ஊடகமொன்று தலையங்க விமர்சனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.