தியாகி திலீபனின் கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடைபயணம் நாவற்குழியை வந்தடைந்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் க.அருந்தவபாலன் நடை பயணத்தில் கலந்து கொண்டார்.
தென்மராட்சி மிருசுவில் பகுதியில் இருந்து ஆரம்பமான நடைபயணம் நேற்று மாலை நாவற்குழியை வந்தடைந்திருந்தது.
இன்றைய தினம் 26 ஆம் திகதி நாவற்குழி பகுதியில் இருந்து புறப்படும் நடைபயணம் காலை 10 மணிக்கு நல்லூர் ஆலய வடக்கு வீதியில் திலீபன் உயிரிழந்த இடத்தினை சென்றடைவுள்ளமை குறிப்பிடத்தக்கது.