பெய்டூட்டுக்கு அடுத்த படியாக அமோனியா நைரேட் சென்னையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இங்கு 37 பாரிய கொள்கலங்களில் 740 தொன் அமோனியா நைரேட் சென்னைக்கு மிக அருகில் 20கி.மீற்றர் தொலைவில் அபாயகரமான முறையில் இது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
தென்கொரியாவிடமிருந்து 2015ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட இந்த இரசாயன அமோனியா நைரேட்டை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து இங்கு களஞ்சியப்படுத்தியுள்ளனர்.