பதவி விலகவுள்ளதாக மஹிந்த அறிவிப்பு!!

1 Mahind
1 Mahind

ஜனா­தி­பதி தேர்தல் நிறைவடைந்தவுடன் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பின்னர் மற்­றொரு தேர்­தலை நடத்­து­வ­தற்கு தான் தலைமை தாங்­கப்­போ­வ­தில்லை என்ற முடிவை இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­னரே எடுத்­துள்ளதாக குறிப்பிட்டார்.

தனது பதவி விலகல் கடி­தத்தில் கையொப்­ப­மிட்டு, அது தற்போது தயாராகவுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­தவே முதலில் ஆலோசிக்கப்பட்டதாகவும் அது சாத்தியப்படாதுபோனால் பதவி விலக தீர்மானித்திருந்ததாக தெரிவித்த அவர், தற்போது ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டதால்,  தேர்தலுக்குப் பின்னர் பதவி விலக தீர்மானித்ததாக சுட்டிக்காட்டினார்.