இலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்!

151801 pregnetlady
151801 pregnetlady

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவர் கொரோனாவால் நாட்டில் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்ணாவார்.

குறித்த கர்ப்பிணிப் பெண் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

ராகமை − பட்டுவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 11 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில், கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.