பணத்துக்காக வன்முறைகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது -பிரியந்த லியனகே

unnamed 4
unnamed 4

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நல்லிணக்கத்தையும்  அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் கடமையாற்றும் அதேவேளை, ஒரு சில காவல்துறை அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பணத்துக்காக வன்முறைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்தார்.

கோப்பாய் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு சிலரின் தேவைக்காக பணத்தைப் பெற்று காவல்துறையினர் செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன், குற்றச்சாட்டு எழுந்துள்ள காவல்துறை உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்