நாடு முழுவதும் கொவிட் தொற்றாளர்கள் வீடுகளில் வைத்து கண்காணிப்பு!

download 2 4
download 2 4

கொவிட் தொற்று உறுதியாகி, அபாய நிலையில் இல்லாத நோயாளர்களை வீடுகளில் வைத்து வைத்திய கண்காணிப்புக்கு உட்படுத்தும் நடைமுறையை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையானது இதுவரையில் மேல் மாகாணத்தில் மட்டுமே அமுல்படுத்தப்பட்டு வந்தது.

எதிர்வரும் 9 முதல் இந்த நடைமுறையை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்தார்.