வடக்கு கிழக்கில் முன்னர் இருந்த நிலை ஏற்பட்டால் நடப்பது என்ன எச்சரிக்கிறார் மகிந்த!

mahinda
mahinda

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திலீபனிற்கான நினைவேந்தல், கதவடைப்பினால் முன்னர் இருந்த நிலை மீண்டும் ஏற்பட்டால் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலேஎமது பதிலாக அமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று( 29)பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .

திலீபனிற்கான நினைவேந்தல், கதவடைப்பினால் வடக்கில் முன்னர் இருந்த நிலை மீண்டும் ஏற்படாது. நாடு பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார் .