கொரோனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்பில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் சுயதனிமைப்பட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர், கொழும்பில் பலரையும் சந்தித்து பேசியுள்ளார். அவர் சந்தித்து பேசிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் இன்று அந்த பிரமுகர் சுயதனிமைக்குள்ளானார்.