மாவீரர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளில் பிரதேச மக்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம்தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 திகதி தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக உயிழந்த உறவுகளை நினைவுக்கு கூறும் மாவீரர் தினத்தினை அனுஷ்ட்டித்து வருகின்றனர்
இம்முறையும் அதற்க்கான ஏற்பாடுகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர் இதேவேளை குறித்த துயிலுமில்லத்தை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ள மக்களின் விபரங்களை கிளிநொச்சி காவல்துறையினர் பெற்றுச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை இம்முறை மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .