கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியது!

நாட்டில் மேலும் 496பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 6373 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6 ஆயிரத்து 373பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 498பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.