கிளி.யில் இளைஞர்களைச் சந்தித்த சுமந்திரன்!

amsinkili1
amsinkili1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர்  மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர்கள் சிலரை நேற்று (23-11-2019) கிளிநொச்சியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் பரமநாதன் குமாரசிங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சந்திப்பில், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் இனிவருங்காலங்களில் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக சந்திப்பில் கலந்துகொண்ட இளைஞர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நடைபெற்ற இச்சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவஞானம் சிறிதரன் தரப்பைச் சேர்ந்த எந்த உறுப்பினர்களும் கலந்துகொள்ளாத இச்சந்திப்பையும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் சிறிதரனின் ஆதரவாளர்கள் சிலர் பகிரங்கமாக சமூகவலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.