ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவே பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுதியான நிலைமையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு, இந்த தீர்மானம் முக்கியமானது என அக்கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார , தலதா அதுகோரள , சந்திராணி பண்டார ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக சஜித் அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று பிரதம வேட்பாளராகவும் அவரே அறிவிக்கப்பட வேண்டும்.
கட்சித் தலைவர் ஒருவராகவும் , பிரதம வேட்பாளர் வேறொருவராகவும் இருப்பதில் எந்தவித பயனும் இல்லை. அதனால் கட்சி தலைவர் யாரோ அவரையே பிரதம வேட்பாளராகவும் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.