சஜித் கலந்துகொள்ளும் மூன்று கூட்டங்கள் இன்று

01 Sajith 1 0
01 Sajith 1 0

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முதன் முறையாக இன்று (17) கொலன்னாவை, கொழும்பு கோட்டை மற்றும் மொரட்டுவை ஆகிய இடங்களில் நடைபெறும் கட்சி உறுப்பினர் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்படி, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கொலன்னாவை மங்கலபாய கேட்போர் கூடத்திலும், பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு கோட்டை சோலிஸ் மண்டபத்திலும், மாலை 5.30 மணிக்கு மொரட்டுவை லெகுன்விச் மண்டபத்திலும் இந்த சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.

இந்த விசேட சந்திப்புக்களை பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எஸ்.எம். மரிக்கார், கலாநிதி ஹர்ச டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.