நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்யும் போது பேணப்பட வேண்டிய சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படவில்லையெனவும், அது குறித்து நடவடிக்கை முன்னெடுக்குமாறும் தெரிவித்து பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பொலிஸ் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழுத் தலைவருக்கு பிரதி சபாநாயகர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார் .