முஸ்லீம் அமைச்சர்கள் இல்லை – கருணா மகிழ்சி

1 e45
1 e45

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி ஏற்றிருந்தால் எம்மை இருந்த இடம் தெரியாமல் ஒதுக்கி இருப்பார்கள் எனது நண்பன் அதாவுல்லாஹ் ஒரு இரவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை அபகரித்தவர் என தெரிவித்தார் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழர்களை ஓரங்கட்ட வேண்டும் கடலில் பிடித்து தள்ள வேண்டும் என்று எண்ணுகின்ற துவேஷம் பிடித்த தலைவர்கள் அனைவரும் சஜித் பிரேமதாச அவர்களுடன்தான் இருந்தார்கள்.அவர்களுக்கு என்ன அநியாயம் செய்தும் காடேற்றியும் தமிழ் மக்களுக்கு ரோசம் வரவில்லை அன்னம் இட்ட கை என்று அன்னத்திற்கு வாக்களித்தனர் . இறுதியில் என்ன நடந்தது சிங்கள மக்கள் தமிழ் மக்களை காப்பாற்றி விட்டனர் சிங்கள மக்களின் வாக்குகளில் ஒரு சனாதிபதி உருவாக்கலாம் என்பதனை இந்த தேர்தல் உணர்த்தியுள்ளது.

இதில் சிறுபான்மை மக்ளின் வாக்கு தேவையில்லை. இருந்தாலும் மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச இவர்கள் தமிழ் மக்களை புறந்தள்ள வில்லை அவர்கள் ஒருபோதும் புறக்கணிக்க போவதுமில்லை பாரிய ஒரு ஆபத்திலிருந்து நாங்கள் தப்பித்துள்ளோம். சுனாமியை விட பத்துமடங்கு ஆபத்தான ஒன்றிலிருந்து தப்பியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார் .