சுற்றுமதிலை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய பொலிஸாருக்கு பணிப்புரை: மனோகணேசன்.

01 9
01 9

வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதானச் சுற்றுமதிலை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மனோ கணேசன் பொலிஸாருக்கு வலியுறுத்தியுள்ளதாக அமைச்சரின் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் கே.கோபிநாத் தெரிவித்தார்.

வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதான சுற்றுமதில் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதான சுற்றுமதில் சேதமாக்கப்பட்டதுடன், மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருந்த வேளை கற்கள் எறியப்பட்டதாக பாடசாலை அதிபர் மற்றும் ஊர் மக்கள் அவருக்கு தெரிவித்ததாக கூறினார்.

குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அமைச்சர் மனோ கணேசனிடமும் தொலைபேசியில் சம்பவத்தை தெரிவித்திருந்தார். இதனையடுத்து அமைச்சரினால் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று அறிந்து விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதுடன் பல்வேறுபட்ட அரச தரப்பினர்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.