தமிழர் பகுதியில் இராணுவ வீரரை தாக்கிவிட்டு துப்பாக்கி பறிப்பு

23 gg
23 gg

கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவரை தாக்கி காயப்படுத்தி அவரது துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இன்று வவுனியா, போகஸ்வெவ முகாமில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கழுத்து பகுதியில் காயமடைந்த இராணுவ வீரர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.