வேலைத்திட்டங்களை முன்னெடுக்க காலம் வேண்டும் !

1 ff 1
1 ff 1

புதிய அரசாங்கத்துக்கு அவர்களின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு போதியளவான காலம் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்ப்பு இன்றி, சந்தர்ப்பவாத பிரச்சினைகளில் தலையிடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தயாராக இல்லை என்றும் “புதிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். அதனை விடுத்து, நாங்கள் வீதியில் இறக்கி கோஷமிட்டால் மக்கள் எம்மீதே குறை கூறுவார்கள்.

ஆட்சியாளர்களால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிகின்றதா இல்லையா என்பது தொடர்பில் மக்கள் புரிந்துகொள்ள இடமளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .