ரஞ்ஜனின் தொலைபேசி உரையாடல்கள் எப்படி ஊடகங்களுக்கு சென்றது?

1 sam
1 sam

விசாரணைக்குட்படுத்தப்படும் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடுவது பண்பாடான ஒரு நடவடிக்கையல்ல என முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு குறித்து அனுராதபுர பிரதேசத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ரஞ்ஜனின் தொலைபேசி உரையாடல்கள் எப்படி ஊடகங்களுக்கு சென்றது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஞ்ஜன் ராமநாயக்கவின் இரகசிய தொலைபேசி அழைப்புக்களில், நீதிமன்றத்துக்கு பலவந்தமாக அழுத்தம் கொடுக்கும் எந்தவித குரல் பதிவுகளும் இல்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.