தடயவியல் அறிக்கையின்படி யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்!

5 ty
5 ty

மத்திய வங்கி முறி தொடர்பான தடயவியல் அறிக்கையின்படி யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனும், பேர்பேச்சுவல் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் ஆலோசியஸும் பிரதான கட்சிகளின் தலைவர்களின் நண்பர்கள் என்பதே இதற்கான பிரதான காரணம் என்று குறிப்பிட்டார்.


குறித்த கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்காக இவர்கள் இருவரும் பெரும் அளவு நிதிகளை அளித்துள்ளனர்.

எனவே அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்றும் ஹிருணிக்கா தெரிவித்தார்.