தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு சபா – குகதாஸ் கோரிக்கை

1 w 1
1 w 1

தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு தேசியக் கட்சியாக மாறுகின்ற போதுதான் எதிர்வரும் காலங்களில் ஏற்படப்போகும் சவால்களை முகங்கொடுக்க முடியும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சபா.குகதாஸ் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தலைமைகள் தங்களுக்குள் முரண்பட்டு, மாற்றுத் தலைமைகள் மாற்று கட்சிகள் என்று கால நேரத்திற்கு உரிய செயற்பாடுகள் இல்லாமல், எல்லோரும் ஒன்றுபட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கடந்த 2004 ஆம் ஆண்டு எவ்வாறு பெற்றேடுத்தார்களோ அவ்வாறு கூட்டாக ஒன்றுபட வேண்டும் என சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.