மஸ்கெலியா-சாமிமலை கொழும்பு தோட்டத்திலுள்ள 28 அறைகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 வீடுகள் சேதமடைந்துள்ளன.
பொதுமக்களின் உதவியுடன் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தீ விபத்தையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
நிர்க்கதியான மக்கள் தோட்ட ஆலய மண்டபத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.