கொழும்பு துறைமுக நுழைவாயிலில் சடலம் கண்டெடுப்பு

1 Col
1 Col

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு கடற்படை கட்டளை, கொழும்பு துறைமுக நுழைவாயிலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, நீரில் மிதந்தவாறு காணப்பட்ட சிதைந்த நிலையில் குறித்த சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

சடலத்தை உடனடியாக கரைக்கு கொண்டுவந்த கடற்படை, மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.