“இயற்கை வளங்களை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் பரந்தன் செருக்கனில் போராட்டம் முன்னெடுப்பு!

vlcsnap 2019 10 25 09h43m29s949
vlcsnap 2019 10 25 09h43m29s949

இயற்கை வளங்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தி பரந்தன் செருக்கன் பகுதியில் நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அணிதிரண்ட இளைஞர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பள நடவடிக்கையினால் அப்பகுதியிலுள்ள இயற்கை வளங்கள் பலவும் அழிவடைந்து வருவதால் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் கோசமெழுப்பினர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு கிளிநொச்சி மேலதிக அரச அதிபர் ப.சத்தியசீலன் மற்றும் பொலிஸாரும் சென்றிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலின் பின்னர் இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.