கப்டன் மஷ்ரப் மோர்தாசா பதவியில் விலகுவதாக அறிவிப்பு

1 as
1 as

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கப்டன் மஷ்ரப் மோர்தாசா (36) கப்டன் பதவியில் விலகுவதாக அறிவித்துள்ளார்.

வங்கதேசம் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே முடிந்த 2 போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற வங்கதேசம் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

போட்டியுடன் மோர்தாசா கப்டன் பதவியில் விலகுகிறார். வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடனாக கருத்து வேறுபாடு தொடர்வதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்றால் 50 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுதந்த வங்கதேச கப்டன் என்ற பெருமையை மோர்தாசா பெறுவார்.