மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளைஞர் கைது

1 0
1 0

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய 19 வயது இளையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடைபாதை, புல்தரை, வடிகால் மூடி போன்றவற்றின் மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சாலையோரத்தில் இருக்கும் நடைபாதைக் கூரையின் மீது இளையர் ஒருவர் மின்-ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும் காணொளி இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி, சமூக ஊடகங்களில் பரவியது.போலிசார் ஆங்காங்கு நிறுவியிருக்கும் கேமராக்களின் உதவியுடன் அந்த இளையர் வெகு விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

நேற்று (நவம்பர் 19) இது குறித்த தகவல் அறிந்த போலிசார் அதே நாளில் சம்பந்தப்பட்ட இளையரைக் கைது செய்தனர்.

முதல்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தச் சம்பவம் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள லோம்பாங் ரோட்டில் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 18) நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த இளையருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $2,500 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.