கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை நடு ரோட்டில் விட்டு சென்ற இளைஞர்கள்!

90
90

ஈக்வடார் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வழியில்லாமல் தெருக்களில் அழுகவிடும் சம்பங்கள் நடந்துவருகின்றன.

ஈக்வடாரில் உள்ள Guayaquil என்ற நகரில், குறைந்தது 150 சடலங்கள் இப்படி விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

எப்படியாவது அதிகாரிகள் இறந்த தங்கள் உறவினர்களின் உடல்களை எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்று நம்பி மக்கள் இவ்வாறு விட்டுச் செல்ல, ஆனால் நிஜத்தில் அப்படி விட்டுச் செல்லப்பட்ட உடல்கள் அங்கேயே மூன்று நாட்கள் வரை விடப்படும் சூழல் நாட்டில் உள்ளது.

சவப்பெட்டிகளுக்கு பதிலாக அட்டைப் பெட்டிகளில் உடல்களை வைத்து அடக்கம் செய்யும் காட்சிகளையும் காண முடிகிறது.

இந்நிலையில், இறந்துபோன உறவினர் ஒருவரின் உடலை ஒரு துணியில் போட்டு இழுத்து வரும் சிலர், அந்த உடல் நடு ரோட்டிலேயே விழுந்துவிட, அதை அப்படியே விட்டு விட்டுச் செல்லும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது