இங்கிலாந்தில் இந்திய இதய அறுவை சிகிச்சை நிபுணர் கொரோனா வைரசுக்கு பலியானார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஜிதேந்திரகுமார் ரத்தோட் என்பவர், இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையில் பணியாற்றி வந்தநிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, கர்டிப் நகரில் உள்ள ஒரு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
ஜிதேந்திர குமார் ரத்தோட், இந்தியாவில் மருத்துவம் படித்தவர். 1995-ம் ஆண்டு இங்கிலாந்தில் வேல்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையில் இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியை தொடங்கினார்.
சில ஆண்டுகள் வேறு நாட்டில் பணியாற்றி விட்டு, 2006-ம் ஆண்டு மீண்டும் வேல்ஸ் வைத்தியசாலைக்கு திரும்பினார்.
அவரது மறைவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலை இரங்கல் தெரிவித்துள்ளது.