இலங்கையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனா வைரசினால் லண்டனில் உயிரிழந்துள்ளார் என பிபிசி தெரிவித்துள்ளது.
மருத்துவர் அன்டன் செபஸ்டியாம்பிள்ளை கிங்ஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மருத்துவர் முதியவர்கள் தொடர்பான சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்றவர் என பிபிசி தெரிவித்துள்ளது.
மார்ச் 20 ம் திகதி அன்டன் செபஸ்டியாம்பிள்ளை தங்கள் மருத்துவமனையில் பணியாற்றினார் என கிங்ஸ்டன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கிங்ஸ்டன் மருத்துவமனை குழுவில் இடம்பெற்றிருந்த முதியவர்கள் தொடர்பான மருத்துவ ஆலோசகரின் மரணத்தை துயரத்துடன் அறிவிக்கின்றோம் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
31 திகதி வரை தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை அவர் உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.