இரு சமுகம் நிம்மதியாக வாழ சஜித்துக்கே வாக்களிக்க வேண்டும்!

q1
q1

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தமிழ் முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறார்.

கோத்தபாய ராஜபக்ச , கருணா, பிள்ளையான் போன்ற தீவிரவாத கொள்கைகளுடைய கட்சிகளுடன் இணைந்தே போட்டியிடுகிறார். இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் பயக்க போவதில்லை.

விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் நிம்மதியாக வாழவில்லை. கிறீஸ் மனிதர்களை ஏவி விட்டு நாட்டு மக்களின் நிம்மதியைக் கெடுத்தார்.இது குறித்து நாட்டு மக்கள் நன்கறிவர்.

சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டுமானால் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து அவரை ஆட்சி பீடத்தில் ஏற்ற வேண்டும் என்றார்.